கோவை உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்பனை - சப்ளையர் கைது

கோவை உடையாம்பாளையத்தில் டாஸ்மாக் கடை பின்புறம் கள்ள சந்தையில் மது விற்பனை செய்த சப்ளையர் கைது செய்யப்பட்டார். போலீஸ் சோதனையில் 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை உடையாம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்பனை செய்த சப்ளையர் கைது செய்யப்பட்டார்.

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் ஆகியோர் நேற்று (அக்டோபர் 7) உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை (எண் 16 18) பின்புறம் உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்த மங்கையநேந்தல் ஊரைச் சேர்ந்த சரவணன் (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டார். சரவணன் அங்குள்ள பாரில் சப்ளையராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இவரிடமிருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ள சந்தையில் மது விற்றதாக இவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...