பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினம்: அமைச்சர் சாமிநாதன் மரியாதை

பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினத்தை முன்னிட்டு, அமைச்சர் சாமிநாதன் திட்டத்தின் முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தினார். விவசாயிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.


Coimbatore: பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு, திட்டத்தின் முன்னோடிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் உருவான நாளான அக்டோபர் 7ம் தேதியை தமிழக அரசு பாசன திட்ட தினமாக அறிவித்திருந்தது. இதனை முன்னிட்டு, பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில், திட்டம் உருவாக காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே. பழனிச்சாமி கவுண்டர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் கே.எஸ். ராவ் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு அமைச்சர் சாமிநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati, பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மகன் மாணிக்கம், திருமூர்த்தி நீர்த்தேக்க திட்ட குழு தலைவர் பரமசிவம், ஆழியார் அணை பாசன திட்ட தலைவர் செந்தில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட விவசாயிகள் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கும், குடிநீர் தேவைக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...