மாநகராட்சி இணைப்பை எதிர்த்து சீராபாளையம் மக்கள் ஆட்சியரிடம் மனு!

சீராபாளையம் ஊராட்சியின் ஒரு பகுதியை மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மக்கள் கருத்து கேட்காமல் முடிவெடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர்.


Coimbatore: சீராபாளையம் ஊராட்சியின் ஒரு பகுதியை கோவை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்துள்ளனர்.

மதுக்கரை ஒன்றியம் சீராபாளையம் ஊராட்சியின் வார்டு எண் 1, 2, 3 ஆகிய பகுதிகளை மட்டும் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு குறித்து மக்களிடம் எந்தவித கருத்துக் கேட்பும் நடத்தப்படவில்லை என்று மக்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.



கடந்த அக்டோபர் 2, 2024 அன்று நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் இந்த இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரியதாகவும், அந்த தீர்மானத்தின் நகலை மனுவுடன் இணைத்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரசின் அனைத்து திட்டங்களையும் பெற தங்கள் பகுதி கிராம பஞ்சாயத்தாகவே தொடர வேண்டும் என்றும், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டாம் என்றும் மக்கள் தங்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து மக்களிடம் நேரடியாக கருத்து கேட்டு, மக்களின் விருப்பத்தின் பேரிலேயே முடிவு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...