கோவையில் 'காட்மா' தொழிற்பேட்டை: அடுத்த வாரம் நிலம் ஒதுக்கீடு தொடக்கம்

கோவை கீரணத்தம் பகுதியில் 'காட்மா இன்டஸ்ரியல் பார்க் பப்ளிக் லிமிடெட்' வளாகத்தில் நிலம் ஒதுக்கீடு பணிகள் அடுத்த வாரம் தொடங்குகிறது. இத்திட்டம் கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோரின் கூட்டு முயற்சியாகும்.


Coimbatore: கோவை மாவட்டம் கீரணத்தம் பகுதியில் கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் குடிசை தொழில்முனைவோர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'காட்மா இன்டஸ்ரியல் பார்க் பப்ளிக் லிமிடெட்' வளாகத்தில் நிலம் ஒதுக்கீடு பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படுகிறது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் நகர்புற பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. நகர விரிவாக்கம், வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில், கோவையை தலைமையகமாக கொண்டு செயல்படும் 'காட்மா' தொழில் அமைப்பு சார்பில், கோவையில் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.

இது குறித்து 'காட்மா' தலைவர் சிவக்குமார் கூறுகையில், "எங்கள் தொழில் அமைப்பில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 5,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குடிசை தொழில் பிரிவை சேர்ந்தவர்கள். நகர விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க எங்கள் தொழில் அமைப்பு சார்பில், கோவையில் தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்யப்பட்டது," என்றார்.

'காட்மா இன்டஸ்ரியல் பார்க் பப்ளிக் லிமிடெட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொழிற்பேட்டை கோவை கீரணத்தம் பகுதியில் 2.19 ஏக்கரில் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 12 கோடி ஆகும். மொத்தம் 27 உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் 2 சென்ட் முதல் அதிகபட்சமாக 7 சென்ட் வரை நிலம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

"தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த வாரம் முதல் நிலம் கிரயம் செய்து பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் தொடங்க உள்ளோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்," என்று சிவக்குமார் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "கீரணத்தம் தொழிற்பேட்டை திட்டத்தை தொடர்ந்து அடுத்தகட்டமாக கோவில்பாளையம் மற்றும் அரசூர் பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைப்பது தொடர்பாக உறுப்பினர்களுடன் பேசி வருகிறோம். முதல் திட்டத்தை போல் அவ்விரு திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...