கோவையில் RSS அணிவகுப்பு ஊர்வலம்: 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பு

உச்சநீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, கோவை சிவானந்தா காலனியில் RSS தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த தொண்டர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை சிவானந்தா காலனியில் இன்று நடைபெற்ற ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) அணிவகுப்பு ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த தொண்டர்கள் பங்கேற்றனர்.



உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.



RSS-ன் ஸ்தாபன தினமான விஜயதசமியன்று ஆண்டுதோறும் நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.



இந்த ஆண்டு RSS-ன் நூற்றாண்டு துவக்கத்தை முன்னிட்டு கோவையில், வடவள்ளி மற்றும் சிவானந்தா காலனி ஆகிய இரு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.



சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஊர்வலம், அப்பகுதியில் துவங்கி முக்கிய சாலைகள் வழியாக நல்லாம்பாளையம் சாலை அம்ருதா பள்ளி மைதானத்தில் நிறைவுபெற்றது. அணிவகுப்பு ஊர்வலத்தைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சியும் நடைபெற்றது.



ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு எவ்வித சம்பவங்களும் இன்றி அமைதியாக நிறைவடைந்தது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...