உப்பாறு அணைக்கு தண்ணீர் கோரி விவசாயிகள் இரண்டாவது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பொள்ளாச்சியில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீர்வளத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை விவசாயிகள் கண்டித்துள்ளனர்.



Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட உப்பாறு பகுதியில் உள்ள அணைக்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கடந்த சில நாட்களாக உப்பாறு பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை பெய்து பரம்பிக்குளம் ஆழியார் பாசனத்திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி வந்த நிலையில், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி உப்பாறு பகுதி விவசாயிகள் நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நீர்வளத் துறை அதிகாரியிடம் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பதிலும் அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். அரசாணை, நீதிமன்ற வழக்கு தீர்ப்பு போன்ற ஆவணங்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், நீர்வளத்துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் மெத்தனப்போக்கில் செயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடும் வரையில் காத்திருப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சிவகுமார் கூறுகையில், "நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...