உப்பாறு அணைக்கு தண்ணீர் கோரி விவசாயிகள் இரண்டாவது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பொள்ளாச்சியில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீர்வளத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை விவசாயிகள் கண்டித்துள்ளனர்.



Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட உப்பாறு பகுதியில் உள்ள அணைக்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கடந்த சில நாட்களாக உப்பாறு பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை பெய்து பரம்பிக்குளம் ஆழியார் பாசனத்திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி வந்த நிலையில், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி உப்பாறு பகுதி விவசாயிகள் நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நீர்வளத் துறை அதிகாரியிடம் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பதிலும் அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். அரசாணை, நீதிமன்ற வழக்கு தீர்ப்பு போன்ற ஆவணங்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், நீர்வளத்துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் மெத்தனப்போக்கில் செயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடும் வரையில் காத்திருப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சிவகுமார் கூறுகையில், "நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...