மாதப்பூர் விவசாயிகளுக்கு வழித்தடம் கோரி ஆட்சியரிடம் திமுக செயலாளர் மனு

கோவை தெற்கு மாவட்டம் மாதப்பூர் ஊராட்சியில் இரயில்வே பணிகளால் வழித்தடம் இழந்த 18 குடும்பங்களுக்கு உதவக் கோரி, திமுக செயலாளர் தளபதி முருகேசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


Coimbatore: கோவை தெற்கு மாவட்டம், சூலூர் ஒன்றியம், மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரயில்வே எல்லைப் பணிகள் காரணமாக 18 குடும்பங்கள் தங்கள் வழித்தடத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் வழித்தடம் பெற்றுத்தர வேண்டும் என்று கோரி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.

மாதப்பூர், தொட்டிய பாளையம், இராமாச்சியம்பாளையம் ஆகிய பகுதிகளில் இரயில்வே பாதை எல்லை பணிகளுக்காக இரயில்வே நிர்வாகம் தனியார் மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தடுப்பு வேலிகள் அமைக்க குழிகள் தோண்டியுள்ளது. இதன் காரணமாக 18 குடும்பங்கள் தங்கள் வழித்தடத்தை இழந்துள்ளனர்.

இந்த நிலையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் அவர்களுடைய பாதைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி, சிங்காநல்லூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தளபதி முருகேசன் இன்று (அக்டோபர் 4) மனு அளித்தார். மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் நேரில் சந்தித்து இந்த பிரச்சினையை எடுத்துரைத்த அவர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...