தாராபுரம் அருகே ரூ.10.13 கோடி மதிப்பீட்டில் 20 வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.10.13 கோடி ஆகும்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ரூ.10.13 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் தலைமை வகித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.



இந்த வளர்ச்சித் திட்டங்களில் பட்டத்திபாளையம் பகுதியில் ரூ.19 லட்சம், கருப்பன் வலசு பகுதியில் ரூ.30 லட்சம், மணலூர் பகுதியில் ரூ.2.97 கோடி, கந்தசாமிபாளையம் பகுதியில் ரூ.25 லட்சம், ஆயிகவுண்டன்பாளையம் ரூ.42 லட்சம், மாலமேடு பகுதியில் ரூ.39 லட்சம், லட்சுமி நகர் பகுதியில் ரூ.35 லட்சம், போளாரை பகுதியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.



இத்திட்டங்களில் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் திறப்பு விழா, ஆரம்ப துணை சுகாதார நிலையம் திறப்பு விழா, தார் சாலை அமைத்தல், பழுதடைந்த தார் சாலையை புதுப்பித்தல், பேருந்து நிறுத்தம் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், சிறுவர் பூங்கா அமைத்தல் ஆகியவை அடங்கும்.

இந்நிகழ்ச்சியில் மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக், மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவரும் மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளருமான பழனிச்சாமி, மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், கன்னிவாடி பேரூராட்சி தலைவர் ரேவதி சுரேஷ், மூலனூர் பேரூராட்சி தலைவரும் மூலனூர் பேரூர் கழக செயலாளருமான மக்கள் தண்டபாணி மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...