கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை ஆய்வு செய்தார்

கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை அக்டோபர் 3 அன்று ஆய்வு செய்தார். இக்கட்டிடத்தை விரைவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் இன்று (அக்டோபர் 3) ஆய்வு செய்தார்.



இந்த புதிய கட்டிடம் பணி நிறைவுற்று, விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் திறப்பு விழா காணவுள்ளது. இந்த ஆய்வின் போது, கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.ரவி உடனிருந்தார்.



இந்நிகழ்வில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.கார்த்திக், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தொ.மு.தியாகராஜன், ஐடி விங் நிர்வாகிகள் சஹா விக்னேஷ், எஸ்.நந்தகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த புதிய கட்டிடம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தின் நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது அப்பகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க உதவும் என்று நம்பப்படுகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...