சிங்காநல்லூர் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு விழா: அமைச்சர் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை

கோவை சிங்காநல்லூரில் நாளை நடைபெறவுள்ள நகர்புற நலவாழ்வு மையத்தின் திறப்பு விழாவிற்கு வருகை தரவுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியனை வரவேற்க செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கிழக்கு மண்டல அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சிங்காநல்லூரில் அமைந்துள்ள நகர்புற நலவாழ்வு மையத்தின் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தர உள்ளார்.

இந்நிலையில், அமைச்சரை வரவேற்கும் பொருட்டு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து இன்று (03.10.2024) வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக், உதவி ஆணையாளர், உதவி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர், CHO மற்றும் ZSO ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், இக்கூட்டத்தில் திராவிட மணி, ராமகிருஷ்ணன் மற்றும் நகர் நல மையத்தின் மருத்துவர்களும் பங்கேற்றனர். திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதேவேளை, கிழக்கு மண்டலம், வார்டு எண் 59, கிருஷ்ணமா நாயக்கர் வீதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி நடைபெற்றது.



இப்பகுதி பொதுமக்களிடம் இருந்து கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக்கிற்கு புகார் வந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.



இதனையடுத்து, இன்று (03.10.2024) வியாழக்கிழமை அந்த மழைநீர் வடிகால் உடனடியாக தூய்மைப்படுத்தப்பட்டது. இச்சீரமைப்பு பணியால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...