1991-ல் அகற்றப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்: ப.சிதம்பரம் விமர்சனம்

கோவையில் நடைபெற்ற ஜவுளித்துறை கலந்துரையாடல் நிகழ்வில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதாரம் உலகளவில் போட்டியிட முடியாது என்று அவர் கூறினார்.



Coimbatore: அகில இந்திய ப்ரொபஷனல் காங்கிரஸ் சார்பில், "India Let's Spin The Chakra Again" என்ற கருப்பொருளுடன் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அகில இந்திய ப்ரொபஷனல் காங்கிரஸ் சேர்மன் பிரவீன் சக்கரவர்த்தி, பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இந்தியா எவ்வாறு ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பது, ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி துறையில் எவ்வாறு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது என்பது குறித்த விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது.



பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ப.சிதம்பரம், "1991 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட கட்டுப்பாடுகள் எல்லாம் தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதாரம், உலகில் போட்டிப் பொருளாதாரமாக வர முடியாது," என்று கூறினார். மேலும், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதியில் போட்டி போட வேண்டும் என்று நினைப்பது பகல் கனவு என்றும், அவற்றின் பொருட்களை உள்நாட்டு சந்தையில் மட்டுமே விற்க முடியும் என்றும் தெரிவித்தார்.

ஜவுளித்துறையில் நிரந்தர தொழிலாளர்கள் இல்லை என்றும், எல்லா தொழிலாளர் சட்டமும் மீறப்படுகிறது என்றும் கூறிய அவர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு வரவில்லை என்றாலும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு வருவதாகவும் குறிப்பிட்டார். எனவே, ஜவுளித்துறையில் தொழிலாளர் பற்றாக்குறை பெரிய பிரச்சனையாக இல்லை என்றும், மாறாக தொழில்நுட்பமும் கட்டுப்பாடுகளும் தான் பெரிய பிரச்சனையாக இருப்பதாகவும் கூறினார்.



"விண்வெளி ஆராய்ச்சியிலும் அணு ஆயுதத்திலும் உலக நாடுகளுக்கு ஈடான தொழில்நுட்பத்தை நம் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கான தொழில்நுட்பத்தையும் நம் விஞ்ஞானிகளால் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இதற்கு அரசு முயற்சி எடுக்கவில்லை," என்று ப.சிதம்பரம் விமர்சித்தார். தொழில்நுட்பமும் அளவும் பெரும் தடைகளாக இருப்பதாகவும், இந்த தடைகளை நீக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...