காந்தி ஜெயந்தி: கோவை கதர் அங்காடியில் மாவட்ட ஆட்சியர் மரியாதை - தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

கோவை கதர் அங்காடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மரியாதை செலுத்தினார். தீபாவளி சிறப்பு விற்பனையையும் தொடங்கி வைத்தார். கதர் பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் உள்ள கதர் அங்காடி நிலையத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு, காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் ராஜேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் விற்பனையையும் அவரே பெற்றுக் கொண்டார். காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் அங்காடியில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.



கதர் ரகங்களுக்கு 30 சதவீதம், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம், பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கிராமப்புற ஏழைப் பெண்களின் மேம்பாட்டு நலனை கருதியும், சிறுதொழில் வல்லுநர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மாநில அரசும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவும் இந்த தள்ளுபடி சலுகையை வழங்கியுள்ளன. பொதுமக்கள் இந்த சலுகையை பயன்படுத்தி கதர் ரகங்களை அதிக அளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...