திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்-வாக்கத்தான்: 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருப்பூர் காந்திநகரில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. 1350 மாணவர்கள் மாரத்தானிலும், 1900 பேர் வாக்கத்தானிலும் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் காந்திநகரில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காகவும், புற்றுநோய்க்கு எதிராகவும் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தன்னார்வ அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

திருப்பூர் மாநகர காவல் துணை கமிஷனர் அசோக் கிரீஸ் யாதவ் கொடியசைத்து மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். காந்திநகர் ஏ.வி.பி. பள்ளி மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் அதே மைதானத்தில் நிறைவடைந்தது.



மாரத்தான் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், வாக்கத்தான் அனைத்து வயது பிரிவினருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது. மினி மாரத்தான் மற்றும் வாக்கத்தானுக்கு 5 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.



17 வயதுக்குட்பட்ட 1350 மாணவ-மாணவிகள் மாரத்தானிலும், 1900 பேர் வாக்கத்தானிலும் என மொத்தம் 3000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி மூலம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...