உடுமலை வனப்பகுதியில் கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு: வனத்துறை விசாரணை தீவிரம்

உடுமலை அருகே வனப்பகுதியில் 20 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வனத்துறையினர் செடிகளை அழித்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனப்பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் வசித்து வருகின்றன. வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நீராதாரங்களை ஆய்வு செய்யவும் வனத்துறையினர் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தளி பிரிவுக்கு உட்பட்ட குழிப்பட்டி சுற்று பகுதியில் வனவர் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிக்குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழவந்தான் மலை சரக பகுதியில் 2 மீட்டர் நீளமுள்ள 20 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக கஞ்சா செடிகள் வேருடன் பிடுங்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன. மேலும் ஆய்வக பகுப்பாய்விற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து உடுமலை வனச்சரகத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளூர் வாசிகளா அல்லது மர்ம நபர்களா என்பதை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வனப்பகுதியில் கஞ்சா பயிரிடுதல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவடப்பு வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...