உடுமலை வனப்பகுதியில் கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு: வனத்துறை விசாரணை தீவிரம்

உடுமலை அருகே வனப்பகுதியில் 20 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வனத்துறையினர் செடிகளை அழித்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனப்பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் வசித்து வருகின்றன. வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நீராதாரங்களை ஆய்வு செய்யவும் வனத்துறையினர் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தளி பிரிவுக்கு உட்பட்ட குழிப்பட்டி சுற்று பகுதியில் வனவர் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிக்குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழவந்தான் மலை சரக பகுதியில் 2 மீட்டர் நீளமுள்ள 20 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக கஞ்சா செடிகள் வேருடன் பிடுங்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன. மேலும் ஆய்வக பகுப்பாய்விற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து உடுமலை வனச்சரகத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளூர் வாசிகளா அல்லது மர்ம நபர்களா என்பதை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வனப்பகுதியில் கஞ்சா பயிரிடுதல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவடப்பு வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...