பி.எஸ்.என்.எல் 25வது ஆண்டு விழா: கோவையில் ஊழியர்கள் பேரணி

கோவை ரேஸ்கோர்ஸில் பி.எஸ்.என்.எல் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பேரணி நடத்தினர். பலூன்கள், பதாகைகளுடன் ஊர்வலமாகச் சென்ற ஊழியர்கள் நிறுவனத்தின் சேவைகளை விளம்பரப்படுத்தினர்.



கோவை: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தின் 25வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பேரணி நடத்தினர்.

அக்டோபர் 1ஆம் தேதி பி.எஸ்.என்.எல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பேரணி நடத்தினர்.



பேரணியில் பங்கேற்ற ஊழியர்கள் கைகளில் பலூன்களையும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைகளை விளக்கும் பதாகைகளையும் ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். இந்த பேரணி மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைகளை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்தனர்.



இந்த நிகழ்வில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் விதமாக நடத்தப்பட்ட இந்த பேரணி, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சியையும், மக்களுக்கான அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...