பி.எஸ்.என்.எல் 25வது ஆண்டு விழா: கோவையில் ஊழியர்கள் பேரணி

கோவை ரேஸ்கோர்ஸில் பி.எஸ்.என்.எல் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பேரணி நடத்தினர். பலூன்கள், பதாகைகளுடன் ஊர்வலமாகச் சென்ற ஊழியர்கள் நிறுவனத்தின் சேவைகளை விளம்பரப்படுத்தினர்.



கோவை: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தின் 25வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பேரணி நடத்தினர்.

அக்டோபர் 1ஆம் தேதி பி.எஸ்.என்.எல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பேரணி நடத்தினர்.



பேரணியில் பங்கேற்ற ஊழியர்கள் கைகளில் பலூன்களையும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைகளை விளக்கும் பதாகைகளையும் ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். இந்த பேரணி மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைகளை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்தனர்.



இந்த நிகழ்வில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் விதமாக நடத்தப்பட்ட இந்த பேரணி, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சியையும், மக்களுக்கான அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...