மேட்டுப்பாளையத்தில் மஹாளய அமாவாசைக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்

மேட்டுப்பாளையம் அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் மஹாளய அமாவாசைக்கு ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுக்க வருவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுக்க வருகை தருவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை வரக்கூடிய மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆசை மற்றும் ஆன்மா சாந்தி அடையும் என நம்பப்படுவதால் அன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் மஹாளய அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருகை புரிவார்கள் என்பதால் அனைத்து இந்து சமுதாய நந்தவன நிர்வாகம் சார்பில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

ஒரே நேரத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30,000 முதல் 40,000 பொதுமக்கள் வரை தர்ப்பணம் கொடுக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டு வரிசைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள் பவானி ஆற்றில் புனித நீராடுவார்கள் என்பதாலும் பிண்டத்தை கரைக்க ஆற்றங்கரைக்கு செல்வது வழக்கமாக இருந்து வரக்கூடிய நிலையில் அங்கு கூடுதலாக பணியாளர்களை நியமித்தும் அங்கேயும் தடுப்புகள் அனைத்தும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதிகாலை முதல் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் சாலை மற்றும் ஊட்டி சாலை போன்ற பகுதிகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



வருகின்ற பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தின் தலைவர் என்.எஸ்.வி. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...