காந்தி ஜெயந்தி: கோவையில் நாளை இறைச்சிக் கடைகள் மூடல் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று கோவை மாநகராட்சி எல்லைக்குள் இறைச்சிக் கடைகள் மற்றும் அறுவைக்கூடங்கள் மூடப்படும். மீறினால் அபராதம் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2, 2024 அன்று மாநகராட்சி எல்லைக்குள் இயங்கும் அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். மேலும், உக்கடம், சக்திரோடு மற்றும் போத்தனூர் பகுதிகளில் உள்ள ஆடு மற்றும் மாடு அறுவைக்கூடங்களும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகளுக்கு எதிராக மாநகராட்சி சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரித்துள்ளார். இதில் அபராதம் விதித்தல், முதல் எச்சரிக்கை வழங்குதல் மற்றும் உரிமம் ரத்து செய்தல் ஆகிய நடவடிக்கைகள் அடங்கும்.

காந்தி ஜெயந்தி தினத்தன்று விலங்குகளை வதை செய்வதற்கும், இறைச்சி விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து இறைச்சி வியாபாரிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...