கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது

அக்டோபர் 27 முதல் கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் தினசரி விமான சேவையை தொடங்குகிறது. கோவை விமான நிலையத்தில் புதிய சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. கோயம்புத்தூர் நெக்ஸ்ட் அமைப்பின் தலைவர் சதீஷ் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமான கோவையில் இருந்து தற்போதுள்ள 27 புறப்பாடுகளில் இருந்து தினமும் 30-க்கும் அதிகமான புறப்பாடுகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கடந்த வாரம் முதல், ஹைதராபாத்துக்கு 26 வாராந்திர சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வியாழன் மற்றும் சனிக்கிழமை தவிர இண்டிகோவின் தினசரி இயக்கப்படும் 3 விமானங்களுக்கு பதிலாக 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அக்டோபர் 1 முதல் பெங்களூருக்கு 28 வாராந்திர சேவைகளை இண்டிகோ இயக்குகிறது. தினசரி 4 சேவைகள் இருக்கும். மேலும், இண்டிகோ நிறுவனம் கோவையில் உள்ள ஒரே ஏடிஆர் விமானத்துடன் அக்டோபர் 1 முதல் கோவாவுக்கான தினசரி விமான சேவைக்கான முன்பதிவைத் தொடங்குகிறது. அக்டோபர் 27-ஆம் தேதியிலிருந்து இந்த சேவை தொடங்குகிறது.

அத்துடன், இண்டிகோ ஏர்லைன்ஸ் கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை மாற்றியமைத்துள்ளது. ஆனால் அபுதாபியில் இருந்து விமான அட்டவணை அப்படியே உள்ளது.

கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே அக்டோபர் 27 முதல் தினசரி இடைநில்லா விமானங்கள் இயக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளதாக சதீஷ் தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...