பத்தாண்டு பொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

கோவையில் 2014ல் தொடரப்பட்ட வழக்கில் இருந்து திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர். சாட்சிகள் நிரூபிக்கப்படாததால் கோவை நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.



கோவை: கோவை ஜே எம் எண் 1 நீதிமன்றம் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட 7 பேரை பத்தாண்டுகால வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. இந்த வழக்கு 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்டது.

2014ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்ற புத்தகத்தை நா.கார்த்திக் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது, அங்கிருந்த அதிமுக கொடி கம்பம், பெயர்ப்பலகையை அடித்து உடைத்து அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக நா.கார்த்திக், மணிகண்டன், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.



பத்தாண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், சாட்சிகள் நிரூபிக்கப்படாத காரணத்தால் அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் நா.கார்த்திக்குக்கு திமுகவினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நா.கார்த்திக், "பழிவாங்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே பொய் வழக்கு போடப்பட்டது. திமுகவின் செயல்பாடுகளை அடக்குவதற்காக அதிமுகவினர் திட்டமிட்டு பொய் வழக்கு போட்டிருப்பது நிரூபணமாகி இருக்கிறது. பத்து ஆண்டுகளாக பொய் வழக்கிற்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கியது வேதனையாக இருக்கிறது," என்று தெரிவித்தார்.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...