இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதைத் தடுக்க வேண்டும் - இந்து மக்கள் கட்சி மனு

கோவையில் இந்து மக்கள் கட்சி, இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் செயல்களைத் தடுக்க கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்தது. ஹிஸ்புல்லா தலைவர் நசுருல்லாவுக்கு அஞ்சலி செலுத்துவதை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையிலான குழுவினர் ஒரு முக்கிய மனுவை சமர்ப்பித்தனர். இந்த மனுவில், சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத ஜிகாத் இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் செயல்பாடுகளை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக, ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் நசுருல்லாவின் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைத்து அஞ்சலி செலுத்த முயற்சிப்பவர்களை கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இஸ்ரேல் நாடு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தின் மீது நடத்திய தாக்குதலில் அந்த இயக்கத்தின் தலைவர் ஹசன் நசுருல்லா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, காசா பகுதியில் பாலஸ்தீன இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஹமாஸுக்கு எதிரான தாக்குதலிலும் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஹவுதி இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தின் மீதும் இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படாமல் இந்த யுத்தம் முடிவுக்கு வராது என்று கூறியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத இயக்கங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகள் இஸ்லாமிய வகுப்புவாத அமைப்புகளோடு தொடர்பு கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி மற்றும் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் நசுருல்லாவுக்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்லாமிய தீவிரவாத பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும், தமிழக காவல்துறை இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...