கோவையில் கத்தியைக் காட்டி போலீசாரை மிரட்டிய இளைஞர் கைது: 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவையில் வாகன சோதனையின் போது 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் கண்டுபிடிப்பு. போலீசாரை கத்தியால் மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். அரிசி, கத்தி மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல்.


Coimbatore: கோவை கரும்புக்கடை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸ் குழு, நேற்று (செப்டம்பர் 28) மாலை புட்டுவிக்கி ரோடு சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, ஸ்கூட்டரில் மூட்டைகளுடன் வந்த இளைஞர் ஒருவரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் சுமார் 150 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தல் செய்யப்படுவது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த இளைஞர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டினார். உடனடியாக செயல்பட்ட போலீசார், அவரை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்டவர் தெற்கு உக்கடம் ஜிஎம் நகரைச் சேர்ந்த ஜமீஷா (29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 150 கிலோ ரேஷன் அரிசி, ஒரு பட்டாக் கத்தி மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


இச்சம்பவம் குறித்து கரும்புக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...