கோவையில் கத்தியைக் காட்டி போலீசாரை மிரட்டிய இளைஞர் கைது: 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவையில் வாகன சோதனையின் போது 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் கண்டுபிடிப்பு. போலீசாரை கத்தியால் மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். அரிசி, கத்தி மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல்.


Coimbatore: கோவை கரும்புக்கடை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸ் குழு, நேற்று (செப்டம்பர் 28) மாலை புட்டுவிக்கி ரோடு சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, ஸ்கூட்டரில் மூட்டைகளுடன் வந்த இளைஞர் ஒருவரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் சுமார் 150 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தல் செய்யப்படுவது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த இளைஞர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டினார். உடனடியாக செயல்பட்ட போலீசார், அவரை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்டவர் தெற்கு உக்கடம் ஜிஎம் நகரைச் சேர்ந்த ஜமீஷா (29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 150 கிலோ ரேஷன் அரிசி, ஒரு பட்டாக் கத்தி மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


இச்சம்பவம் குறித்து கரும்புக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...