அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கட்டிடம் திறப்பு: கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பங்கேற்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. கோவை எம்பி கணபதி ராஜ்குமார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக பாரதிய வித்யா பவன் தலைவரும் கல்வியாளருமான கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டார்.



விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பிரிக்கால் லிமிடெட் தலைவர் வனிதா மோகன், லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ஆகியோர் பங்கேற்றனர்.



பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனையின் இயக்குனர் (திட்டங்கள்) அரவிந்த், மருத்துவமனை தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை செய்துள்ள சாதனைகள் குறித்தும் வருங்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கினார்.



கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தனது உரையில், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ தர்மத்தோடு செயல்படுவதாகவும், அரவிந்த் கண் மருத்துவமனை போன்று சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் இருப்பவர்கள் அரசுக்கு மிகவும் உதவிகரமாக செயல்படுவதாகவும் கூறினார்.



மேலும் அவர், தமிழக முதல்வர் கோவையின் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், சென்னைக்கு இணையாக கோவை முன்னேறி வருகிறது என்றும் குறிப்பிட்டார். "நியூயார்க்கையும் வாஷிங்டனையும் போன்று கோவையும் சென்னையும் வரப்போகிறது" என்று கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...