வால்பாறையில் மின் பராமரிப்பு பணி: பல பகுதிகளில் நாளை மின் தடை

வால்பாறையில் செப்டம்பர் 30 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு பணி நடைபெறும். பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். ஊமையாண்டி முடக்கு பகுதியில் புதிய மின் கோபுரம் அமைக்கப்படுகிறது.


Coimbatore: வால்பாறை பகுதியில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதனால், அய்யர்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வால்பாறை வட்டாரப் பகுதிகளான அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், உறங்குடி, தாய்முடி, சேக்கல் முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ஹை ஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உருளிகள் வால்பாறை, சிங்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும்.

மேலும், மின் பாதைகளுக்கு அருகே உள்ள மரங்களின் கிளைகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊமையாண்டி முடக்கு பகுதியில் புதிய மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் அங்கலக்குறிச்சி மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும். இதனால் அவ்வப்போது மின் தடை ஏற்படலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இந்த மின் தடை குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்து, தங்களது அன்றாட பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...