வால்பாறையில் மின் பராமரிப்பு பணி: பல பகுதிகளில் நாளை மின் தடை

வால்பாறையில் செப்டம்பர் 30 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு பணி நடைபெறும். பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். ஊமையாண்டி முடக்கு பகுதியில் புதிய மின் கோபுரம் அமைக்கப்படுகிறது.


Coimbatore: வால்பாறை பகுதியில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதனால், அய்யர்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வால்பாறை வட்டாரப் பகுதிகளான அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், உறங்குடி, தாய்முடி, சேக்கல் முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ஹை ஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உருளிகள் வால்பாறை, சிங்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும்.

மேலும், மின் பாதைகளுக்கு அருகே உள்ள மரங்களின் கிளைகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊமையாண்டி முடக்கு பகுதியில் புதிய மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் அங்கலக்குறிச்சி மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும். இதனால் அவ்வப்போது மின் தடை ஏற்படலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இந்த மின் தடை குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்து, தங்களது அன்றாட பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...