கோவை மாநகராட்சி ஆணையர் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வடக்கு மண்டலத்தில் அவிநாசி சாலை, பீளமேடு, குரும்பர் வீதி பகுதிகளில் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் இப்பணியை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.



வார்டு எண் 27-க்குட்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு பேருந்து நிறுத்தம், வி.கே.சாலை, பொரிக்கடை சந்து, குரும்பர் வீதி 1 & 2, அவிநாசி பிரதான சாலை சென்டர் மீடியன் ஆகிய பகுதிகளில் இந்த சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.



100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.





இப்பணியில் சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடு மண்களை அகற்றுதல், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுதல், தேவையில்லாத பொருட்களை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தியை தடுத்தல், புகை மருந்து அடித்தல், சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் தேங்கியுள்ள மண்களை அகற்றுதல், மின்சார கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல் போன்றவை அடங்கும்.



இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் திருமூர்த்தி, நாசர், சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், பவுன்ராஜ், லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....