உடுமலையில் அமைச்சர் சாமிநாதன் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்

உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு அமைச்சர் சாமிநாதன் தண்ணீர் திறந்து வைத்தார். 135 நாட்களில் 70 நாட்கள் தண்ணீர் திறப்பு, 65 நாட்கள் நிறுத்தம் என்ற அடிப்படையில் மொத்தம் 6894.22 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்படும்.



திருப்பூர்: உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பி சாமிநாதன் தண்ணீர் திறந்து வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் புதிய பாசன பகுதிகளான திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்கள் பாசன பகுதிகளுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதம் 4233.60 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், அமராவதி புதிய பாசன பகுதிகளுக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 440 கன அடி வீதம் 2,661.12 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



இந்த தண்ணீர் திறப்பு இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 தேதி வரை 135 நாட்களில் 70 நாட்கள் தண்ணீர் திறப்பு, 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில் மொத்தம் 6894.22 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்த தண்ணீர் திறப்பின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அமராவதி அணையின் மொத்த நீர்த்தேக்க அளவு தொண்ணூறு அடிகள் என்றால், தற்பொழுது 87.14 அடி நீர் இருப்பதாகவும், நீர்வரத்து 30 கன அடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பி சாமிநாதன், "அமராவதி அணையில் இருந்து இன்று பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், "அமராவதி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் தற்பொழுது காவிரி ஆற்றில் கலந்து வருகின்றது. இனிவரும் காலங்களில் அமராவதி பாசன பகுதிகளில் தடுப்பணைகள் அமைத்து உபரி நீர் சேகரிக்கப்படும்" என்றும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...