பத்மஸ்ரீ பாப்பம்மாள் உடலுக்கு அமைச்சர் முத்துசாமி அஞ்சலி - திமுகவிற்கு பேரிழப்பு

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் உடலுக்கு அமைச்சர் முத்துசாமி அஞ்சலி செலுத்தினார். திமுகவின் மூத்த உறுப்பினரான பாப்பம்மாளின் இழப்பு கட்சிக்கு பேரிழப்பு என அமைச்சர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் வசித்து வந்த பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.



திமுகவின் மூத்த உறுப்பினரான பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக அமைச்சர் முத்துசாமி அவர்கள் இன்று நேரில் வருகை புரிந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் முதலமைச்சர் சார்பிலும், அமைச்சர் பெருமக்கள் சார்பிலும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார். அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "பாப்பம்மாள் அவர்கள் 1951 ஆண்டு முதல் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவர். குறிப்பாக ஹிந்தி திணிப்பு போராட்டத்தில் பெரும்பங்காற்றினார்" என்று நினைவு கூர்ந்தார்.

"பாப்பம்மாளின் இழப்பு திமுகவிற்கு பேரிழப்பு" எனக் கூறிய அமைச்சர், "இந்த பகுதியில் அவர் விட்டுச் சென்ற திமுகவின் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்" என உறுதியளித்தார்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...