பத்மஸ்ரீ பாப்பம்மாள் உடலுக்கு அமைச்சர் முத்துசாமி அஞ்சலி - திமுகவிற்கு பேரிழப்பு

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் உடலுக்கு அமைச்சர் முத்துசாமி அஞ்சலி செலுத்தினார். திமுகவின் மூத்த உறுப்பினரான பாப்பம்மாளின் இழப்பு கட்சிக்கு பேரிழப்பு என அமைச்சர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் வசித்து வந்த பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.



திமுகவின் மூத்த உறுப்பினரான பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக அமைச்சர் முத்துசாமி அவர்கள் இன்று நேரில் வருகை புரிந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் முதலமைச்சர் சார்பிலும், அமைச்சர் பெருமக்கள் சார்பிலும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார். அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "பாப்பம்மாள் அவர்கள் 1951 ஆண்டு முதல் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவர். குறிப்பாக ஹிந்தி திணிப்பு போராட்டத்தில் பெரும்பங்காற்றினார்" என்று நினைவு கூர்ந்தார்.

"பாப்பம்மாளின் இழப்பு திமுகவிற்கு பேரிழப்பு" எனக் கூறிய அமைச்சர், "இந்த பகுதியில் அவர் விட்டுச் சென்ற திமுகவின் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்" என உறுதியளித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...