பத்மஸ்ரீ பாப்பம்மாள் மறைவு: வானதி சீனிவாசன் அஞ்சலி

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது விவசாயி பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அஞ்சலி செலுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். 108 வயது வரை தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த பாப்பம்மாளுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது.

பாப்பம்மாளின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பாப்பம்மாளின் குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "பாப்பம்மாள் பெண்களின் அடையாளமாகவும், கோவையின் அடையாளமாகவும் திகழ்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மதிப்புக்குரியவராக இருந்தார். பிரதமர் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவார்," என்று கூறினார். பாப்பம்மாளின் ஆத்மா சாந்தியடைய பாஜக சார்பில் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.



பின்னர், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான ஏகே செல்வராஜும் பாப்பம்மாளின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

Newsletter

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...