புரட்டாசி சனிக்கிழமையன்று பொள்ளாச்சி அருகே ராமர் கோவிலில் பக்தர்கள் திரள் - வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம்

பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம் ராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். கொங்கு மண்டல பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம் நடைபெற்றது.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராமர் பண்ணை ராமர் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



இந்நிகழ்வில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர். கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.



இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி சுப்பேகவுண்டன்புதூர் மற்றும் நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த பாரதி வள்ளி கும்மியாட்ட கலைக்குழுவினர் சார்பில் வள்ளி கும்மியாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி கும்மியாட்டத்தில், வள்ளியின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றிய பாடல்களுக்கு ஏற்ப நடனமாடினர். இந்த அற்புதமான கலை நிகழ்ச்சியைக் கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இவ்வாறு புரட்டாசி சனிக்கிழமை கொண்டாட்டங்களும், பாரம்பரிய கலை நிகழ்ச்சியும் இணைந்து, மீனாட்சிபுரம் ராமர் கோவிலில் ஒரு விழாக்கோலம் நிலவியது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...