பத்மஸ்ரீ பாப்பம்மாள் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் (110) உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயற்கை விவசாயத்திற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் நேற்று இரவு காலமானார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் என்கிற பாப்பம்மாள் (110) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு 8.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாப்பம்மாள் தனது இளம் வயதிலிருந்தே விவசாயம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வந்தார். 100 வயதைக் கடந்தும் விவசாயம் செய்து வந்த அவரது ஆர்வத்தைக் கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

விருது வழங்கும் போது பிரதமர் நரேந்திர மோடி பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அவரது 109வது வயதில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரது பேத்தி கமலம் மற்றும் மகள் ஜெயசுதா ஆகியோர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.

பாப்பம்மாள் இறந்த தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளாக வந்து அவரது உடலுக்கு காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...