ஆனைமலையில் தொழிலாளி மற்றும் வன உயிரின புகைப்படக் கலைஞர் விபத்தில் உயிரிழப்பு

ஆனைமலையில் மில் தொழிலாளி இயந்திரத்தில் சிக்கி உயிரிழப்பு. பொள்ளாச்சி அருகே வன உயிரின புகைப்படக் கலைஞர் ஜீப் விபத்தில் பலி. இரு சம்பவங்களிலும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


Coimbatore: ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த இரண்டு தனித்தனி விபத்துகளில் இரு நபர்கள் உயிரிழந்தனர்.

ஆனைமலை அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் ஆனந்தரசு (60) மனைவி தனலட்சுமி (58), அங்குள்ள மில்லில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்ற அவர், அதிகாலை 2:00 மணிக்கு வெப் கார்டிங் இயந்திரத்தில் வேலை செய்த போது, புடவை மாட்டி வலதுகை முட்டியில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில், பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த ரோகித் காளிங்கராயன் (41), விவசாயி மற்றும் வன உயிரின புகைப்படக் கலைஞர், சேத்துமடையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு ஜீப்பின் பின்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தார். ஓட்டுநர் பிரதீப் ஜீப்பை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதாக தெரிகிறது. வேகத்தடையில் ஜீப் ஏறியபோது ரோகித் காளிங்காராயன் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இரு சம்பவங்கள் குறித்தும் ஆனைமலை போலீஸார் நேற்று (செப்.26) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...