மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பெண் நகராட்சி தலைவர் மீது டம்ளர் வீச்சு: பரபரப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பெண் நகராட்சி தலைவர் மீது டம்ளர் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் வெடித்தது. 9 அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் பெண் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் மீது டம்ளர் வீசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பாகவே, நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில்லை, குடிநீர் சரியாக விநியோகம் செய்வதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினர்.



இந்நிலையில், திமுக கவுன்சிலர் நவீன், வருவாய் துறைக்கு சொந்தமான நீர்வழி பாதையை ஆக்கிரமித்து நகராட்சி சாலை அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஒரு பெண் அதிகாரி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது, அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஒரு கவுன்சிலர் திடீரென டம்ளரை எடுத்து நகராட்சி தலைவர் மீது வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக திமுக கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் இருக்கை முன்பு திரண்டு அதிமுக கவுன்சிலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் உள்ளே அழைக்கப்பட்டு கவுன்சிலர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வின், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி அங்கிருந்து வெளியேறினார். இதனைக் கண்டித்தும், நகராட்சியில் சரிவர பணிகள் மேற்கொள்ளாத நிர்வாகத்தைக் கண்டித்தும் அதிமுக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நகராட்சி தலைவரை அச்சுறுத்தும் விதமாகவும் கூட்டத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாகக் கூறி, அதிமுகவைச் சேர்ந்த 9 நகர்மன்ற உறுப்பினர்களை அடுத்த இரண்டு கூட்டங்களுக்கு பங்கேற்காதவாறு தடை விதிப்பதாகவும், அவர்களை இடைநீக்கம் செய்வதாகவும் நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...