முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்: கோவையில் திமுகவினர் கொண்டாட்டம்

கோவையின் பூ மார்க்கெட் மற்றும் 27வது வார்டில் திமுகவினர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை கொண்டாடினர். பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


கோவை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து கோவையில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பூ மார்க்கெட் பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



இந்த நிகழ்வில் திமுகவின் தொழிலாளர் அணி துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், போனஸ்பாபு, என்ஜினியர் அய்யாசாமி, ஆலாந்துறை ராஜேந்திரன், ரகுநாத், மாணவரணி பிரச்சனா, அருண், ஜெகன், நிகால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இதேபோல, கோவை 27வது வார்டிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில், திமுக கழக மூத்த முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த செய்தி கோவை திமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை இந்த மகிழ்ச்சி நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...