கல்லாரில் நடைபெற்ற தென்மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நிறைவு

மேட்டுப்பாளையம் அருகே கல்லாரில் நான்கு நாட்கள் நடைபெற்ற தென்மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நிறைவடைந்தன. 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோவை நக்சல் தடுப்பு பிரிவு எஸ்.பி பரிசுகள் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் கடந்த நான்கு நாட்களாக தென் மண்டல சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வந்தன.

இந்த போட்டிகளில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்றன. 14, 17, 19 வயதுடையோருக்கென நாக்கவுட் முறையில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 1500க்கும் மேற்பட்ட ஹாக்கி வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

14, 17, 19 ஆகிய மூன்று பிரிவுகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி மாணவர்கள் மூன்று வயது பிரிவுகளிலும் முதல் இடத்தைப் பெற்று வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றினர். மேலும், 14 வயதுடையோர் பிரிவில் சென்னை ஜே.சி.எஃப் காலணி பள்ளி மாணவிகள் முதல் இடத்தைப் பிடித்த நிலையில், இரண்டாம் இடத்தை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி பிடித்தது.

இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கோவை நக்சல் தடுப்பு பிரிவு எஸ்.பி பத்ரிநாராயணன் மற்றும் கவிஞர் கவிதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...