தொண்டாமுத்தூரில் புதிய வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்திற்கு 9 செண்ட் நிலம் ஒதுக்கீடு

கோவை தொண்டாமுத்தூரில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் அமைக்க 9 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேளாண் உதவி இயக்குனரிடம் உத்தரவு நகலை வழங்கினார்.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் அமைக்க 9 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்கான உத்தரவு நகலை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, வேளாண் உதவி இயக்குனர் சக்திவேலிடம் வழங்கினார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கவுன்சிலர்கள் மாமன்றக் கூட்டத்தில் இந்த 9 செண்ட் நிலம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உத்தரவு நகல் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலாராணி, தொண்டாமுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தப் புதிய கட்டிடம் அமைவதன் மூலம், அப்பகுதி விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான சேவைகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...