கோவையில் 'மக்களைத்தேடி மாநகராட்சி' சிறப்பு முகாம் துவக்கம்

கோவை கிழக்கு மண்டலத்தில் மக்களைத்தேடி மாநகராட்சி சிறப்பு முகாம் துவக்கம். மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்தில், "மக்களைத்தேடி மாநகராட்சி" என்ற சிறப்பு முகாமினை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வு காமராஜர் சாலையில் உள்ள மணிமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS முன்னிலையில் இந்த முகாம் தொடங்கப்பட்டது. தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்த சிறப்பு முகாமில் வருவாய் பிரிவு, பொறியியல் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு மற்றும் நகரமைப்புப் பிரிவு சார்பில் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இதில் சொத்துவரி மாற்றம், குடிநீர் இணைப்பு, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி போன்ற சேவைகள் அடங்கும்.



இந்த முகாம் 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு மண்டலம் என ஐந்து மண்டலங்களிலும் நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாநகராட்சியின் சேவைகளைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



முகாமின் முதல் நாளிலேயே பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணைகளும் வழங்கப்பட்டன. இந்த முயற்சி மாநகராட்சியின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...