வால்பாறையில் போக்குவரத்துக்கு இடையூறு: பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது

வால்பாறையில் சாலையில் வாகனத்தை நிறுத்தி, அரசு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று மாலை 7 மணி அளவில் அக்காமலை எஸ்டேட் செல்லும் சாலையில் சுப்பிரமணி கோவில் அருகே திருப்பூர் பகுதியில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் மகேந்திரா வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றனர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதே வழியில் வெல்லமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு வந்த பேருந்தின் ஓட்டுநர் சரவணன் மற்றும் நடத்துனரை, குடிபோதையில் இருந்த கார் நிறுத்தியவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.



தகவல் அறிந்து வந்த வால்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் கேட்காமல் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர், பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

ஓட்டுநர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், பாஜக கட்சியின் மண்டல பொதுச் செயலாளர் முரளிதரன் (35), கொங்கு மண்டல நகர் இளைஞர் அணி தலைவர் துரைமுருகன் (36), கொங்கு மண்டல இளைஞர் அணி துணைத் தலைவர் வெங்கடேஷ் (25), மண்டல இளைஞர் அணி செயலாளர் அருண் (30), கோதண்டம் (46) மற்றும் மண்டல பொதுச் செயலாளர் சசிக்குமார் (42) ஆகிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.



இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...