தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் முற்றுகைப் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட உபரி நிலங்களுக்கு எஃப் பட்டா கோரி ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் நிறுவனத் தலைவர் பவுத்தன் தலைமை வகித்தார்.

போராட்டக்காரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த மனுவில், காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தின் காடையூர் மற்றும் வட சிண்ணாரி பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வீனம்பாளையம், கல்லாங்காட்டுப்புதூர், பெனங்காளி வலசு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின அருந்ததிய மக்களுக்கு 1994 ஆம் ஆண்டு உபரி நிலம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



ஈரோடு நில சீர்திருத்த உதவி ஆணையரின் உத்தரவின்படி, காடையூர் கிராமத்தில் 30 பயனாளிகளுக்கும், வட சின்னாரி பாளையம் கிராமத்தில் 21 பயனாளிகளுக்கும் மொத்தம் 51 பயனாளிகளுக்கு உபரி நிலம் வழங்கப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகள் கடந்தும் இந்த நிலங்களை விவசாயம் செய்வதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த நிலங்களை அளவீடு செய்து, விவசாயம் செய்வதற்கான எஃப் பட்டா நகல் உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் மாவட்ட நிர்வாகி சி.கார்த்திக், அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் வி.கே.தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...