அரசு பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

அங்குலகுறிச்சியில் கர்ப்பிணி பெண்ணுக்காக பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: அங்குலகுறிச்சியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கனிமொழி என்பவர் ஆழியாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல அங்கலக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் இன்று (செப்.24) காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை (10.B) கைகாட்டி நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றுவிட்டது.



இதையடுத்து ஆழியாறு சென்று விட்டு திரும்பிய அதே அரசு பேருந்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து பேசிய பெண் ஒருவர், "பேருந்தை நிறுத்த கை காண்பித்தும் நிறுத்தாமல் சென்று விட்டனர். இதற்கு பெண்களுக்கு இலவச பேருந்து விட்டதற்கு விடாமலேயே இருந்திருக்கலாம்" என்று கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...