கோவை 54வது வார்டில் குடிநீர் பிரச்சனை: கிழக்கு மண்டல தலைவர் நேரடி ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 54வது வார்டில் குடிநீர் மற்றும் உப்பு நீர் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தின் 54வது வார்டில் உள்ள மதுரை வீரன் கோவில் பகுதியில் குடிநீர் மற்றும் உப்பு நீர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் இன்று (24.09.2024) அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது அவர் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பிரச்சனைகளை சரிசெய்யுமாறு வலியுறுத்தினார்.



குறிப்பாக, உப்பு நீர் மற்றும் குடிநீர் விநியோகத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது பகுதிச் செயலாளர் சிவா MC, வட்டச் செயலாளர் ஆனந்த், உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், கொங்கு பேரவை தனபால், ஆடிட்டர் சசிகுமார், சூயஸ் தியாகு, சானிடரி சூப்பர்வைசர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

மண்டல தலைவரின் இந்த திடீர் ஆய்வு மற்றும் உடனடி நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குடிநீர் மற்றும் உப்பு நீர் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...