கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன அறிவியலாளருக்கு தமிழ்நாடு விஞ்ஞானி விருது

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் D. புத்திர பிரதாப், தமிழ்நாடு அரசின் 2021-க்கான 'தமிழ்நாடு விஞ்ஞானி விருது'க்கு சமூக அறிவியல் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது ஆராய்ச்சிப் பணிகள் கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேளாண் தொழில்நுட்ப விரிவாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளன.


Coimbatore: கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் D. புத்திர பிரதாப், தமிழ்நாடு அரசின் 2021-க்கான 'தமிழ்நாடு விஞ்ஞானி விருது'க்கு சமூக அறிவியல் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருது ரூ.50,000 பரிசுத்தொகையுடன் பாராட்டு பத்திரத்தையும் உள்ளடக்கியது.

முனைவர் புத்திர பிரதாப், 1995-ஆம் ஆண்டின் வேளாண் ஆராய்ச்சிப்பணி தொகுப்பைச் சேர்ந்தவர். அவரது ஆராய்ச்சிப் பணிகள் கிராமப்புற வளர்ச்சி, வேளாண் தொழில்நுட்ப விரிவாக்கம், பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதிகளில் தகவல் பரப்புரை ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் கரும்பு, செம்மறியாடு மற்றும் முயல் விவசாயிகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க புதுமையான விரிவாக்க முறைகளை உருவாக்கி செயல்படுத்தியுள்ளார்.



கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில், முனைவர் புத்திர பிரதாப் 'கேன் இன்ஃபோ' என்ற முன்னோடி இணையதள திட்டத்தை செயல்படுத்தினார். இது கரும்பு உற்பத்தியாளர்கள், விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் கரும்பு விஞ்ஞானிகளை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அவரது 'உழவர் பங்கேற்பு செயல் ஆராய்ச்சித் திட்டம்' கரும்பு விவசாயத்தில் இலாபம் பெருக்கவும், நீர் வளங்களை 19% வரை சேமிக்கவும் உதவியுள்ளது.

இவரது முக்கிய படைப்பான 'மண் ஈரப்பதம் காட்டி' என்ற நீர் பாசன திட்டமிடல் கருவி, மத்திய நீர் வள அமைச்சகத்தின் தேசிய நீர் விருதுகள் 2019-இல் முதல் பரிசையும், 2021-ஆம் ஆண்டின் நீர் நிலைத்தன்மை விருதையும் பெற்றது. தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்களிடையே செயல்படுத்திய வேளாண் தகவல் தொடர்பு தொழில்நுட்ப விரிவாக்க ஆராய்ச்சித் திட்டங்களின் முடிவுகள், மாநிலத்தின் இணைய விரிவாக்கக் கொள்கைகளுக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.

ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 13 தொலைதூர மலைக் கிராமங்களில் வாழும் பழங்குடியினரின் தேவைகளை மதிப்பீடு செய்து, அறிவு-சார் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்கள் நடத்தி, அடிப்படை பொருட்கள் வழங்கி அவர்களின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளார்.

முனைவர் புத்திர பிரதாப் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவற்றில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஜவஹர்லால் நேரு விருது, ஈ-வேர்ல்ட் நிறுவனத்தின் 'சிறந்த தொலை மைய முன்முயற்சி விருது', டாக்டர் நரசிங்கராவ் நிறுவனர் தின பொது அறிவு விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...