கோவை தொழிலதிபர் தொழிலாளர்களை விமானப் பயணத்தில் அழைத்துச் சென்று கனவை நனவாக்கினார்

கோவை பேரூரைச் சேர்ந்த பிரியா கேட்டரிங் உரிமையாளர் லட்சுமி ராஜனின் மகன் பிரகாஷ் தேவராஜன், 26 தொழிலாளர்களை விமானப் பயணத்தில் அழைத்துச் சென்று தனது சிறுவயது கனவை நிறைவேற்றினார்.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி ராஜன் என்பவர் பிரியா கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மகன் பிரகாஷ் தேவராஜன், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 26 தொழிலாளர்களை விமானப் பயணத்தில் அழைத்துச் சென்று தனது சிறுவயது கனவை நிறைவேற்றியுள்ளார்.

பிரகாஷ் தேவராஜன், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 26 தொழிலாளர்களை கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சேலம் வரை விமானப் பயணம் செய்ய வைத்தார்.



அதோடு மட்டுமல்லாமல், அவர்களை கேரளாவின் ஆலப்புழாவுக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலா பயணம் மேற்கொள்ளச் செய்தார்.

இது குறித்து பிரியா கேட்டரிங்கில் பணிபுரியும் சரோஜினி என்ற தொழிலாளி கூறுகையில், "பிரகாஷ் சிறுவயதில் இருந்தே எங்களுடன் மிகவும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். சிறு வயதில் ஒருநாள் 'நீ பெரியவனாகி என்ன செய்யப் போகிறாய், உன்னுடைய ஆசை என்ன' என்று சாதாரணமாகக் கேட்டோம். அப்போது, 'நான் பெரியவனாகி உங்களையெல்லாம் விமானத்தில் அழைத்துக் கொண்டு செல்வேன்' என்று கூறினார். அப்போது அதைக் கேட்டு சிரித்துக் கொண்டு சாதாரணமாகத்தான் நாங்கள் இருந்தோம். ஆனால், அன்று அவர் சொன்னதை கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றியுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, தனது கனவை நிறைவேற்றிய பிரகாஷ் தேவராஜனுக்கு பலரும் தற்போது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...