கோவை தொழிலதிபர் தொழிலாளர்களை விமானப் பயணத்தில் அழைத்துச் சென்று கனவை நனவாக்கினார்

கோவை பேரூரைச் சேர்ந்த பிரியா கேட்டரிங் உரிமையாளர் லட்சுமி ராஜனின் மகன் பிரகாஷ் தேவராஜன், 26 தொழிலாளர்களை விமானப் பயணத்தில் அழைத்துச் சென்று தனது சிறுவயது கனவை நிறைவேற்றினார்.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி ராஜன் என்பவர் பிரியா கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மகன் பிரகாஷ் தேவராஜன், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 26 தொழிலாளர்களை விமானப் பயணத்தில் அழைத்துச் சென்று தனது சிறுவயது கனவை நிறைவேற்றியுள்ளார்.

பிரகாஷ் தேவராஜன், தனது நிறுவனத்தில் பணிபுரியும் 26 தொழிலாளர்களை கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சேலம் வரை விமானப் பயணம் செய்ய வைத்தார்.



அதோடு மட்டுமல்லாமல், அவர்களை கேரளாவின் ஆலப்புழாவுக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலா பயணம் மேற்கொள்ளச் செய்தார்.

இது குறித்து பிரியா கேட்டரிங்கில் பணிபுரியும் சரோஜினி என்ற தொழிலாளி கூறுகையில், "பிரகாஷ் சிறுவயதில் இருந்தே எங்களுடன் மிகவும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். சிறு வயதில் ஒருநாள் 'நீ பெரியவனாகி என்ன செய்யப் போகிறாய், உன்னுடைய ஆசை என்ன' என்று சாதாரணமாகக் கேட்டோம். அப்போது, 'நான் பெரியவனாகி உங்களையெல்லாம் விமானத்தில் அழைத்துக் கொண்டு செல்வேன்' என்று கூறினார். அப்போது அதைக் கேட்டு சிரித்துக் கொண்டு சாதாரணமாகத்தான் நாங்கள் இருந்தோம். ஆனால், அன்று அவர் சொன்னதை கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றியுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, தனது கனவை நிறைவேற்றிய பிரகாஷ் தேவராஜனுக்கு பலரும் தற்போது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...