உடுமலையில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் தா.வைரமுத்து வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் செ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார், மற்றும் மாநில இணைச்செயலாளர் ரா.கண்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், மாநில தலைவரின் எழுத்துரை நிர்வாகிகளுக்கு வாசிக்கப்பட்டது. பின்னர் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, அவை குறித்த கருத்துக்களை நிர்வாகிகள் முன்வைத்து விவாதித்தனர்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

1. ஊதியம் தொடர்பாக சத்ய நாராயணன் கமிட்டிக்கு அறிக்கை தயார் செய்ய குழு அமைத்தல்.

2. உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 தொடர்பாக விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் உள்ளீடு செய்தல்.

3. துணை வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்களுக்கு வேளாண்மை தோட்டக்கலை அலுவலருக்கு இணையான ஊதியம் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க அரசுக்கு வலியுறுத்துதல்.

4. உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கம் போன்ற பல சங்கங்களை ஒருங்கிணைத்து ஊதியம் தொடர்பான நடவடிக்கை குழு அமைத்தல்.

இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதில் இருந்து 300க்கும் மேற்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். புதிதாக சங்கத்தில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்வின் முடிவில் மாவட்ட செயலாளர் பாலு நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...