பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

கோவை சவுரிபாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.


Coimbatore: பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கை மண்டலில் சவுரிபாளையம் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று (செப்டம்பர் 22) மேளதாளங்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிங்கை மண்டல உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் ரமேஷ்குமார், SRS.ராஜா ஆகியோர் தலைமையில் வழிபாடு நடைபெற்றது. மாவட்ட உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் RT.முரளி, மண்டல உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர்கள் பைலட் முருகேசன், பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் ஜே.ரமேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், மாவட்ட துணைத் தலைவர் M.R.சரவணன், ராஜசேகர், அசோக்குமார், ராஜேந்திர பிரசாத், காட்டன்சுரேஷ், சக்தி, கணேசன், பூபேஷ், சொர்ண அரவிந்த், கண்ணன், வில்லியம்ஸ், மகேந்திரன் மற்றும் பல தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நடைபெற்றதோடு, பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. கோவில் வளாகத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...