ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

பொள்ளாச்சி அருகே நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் அவர் எடுத்துரைத்தார்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூரில் ஆனைமலை கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் 116வது பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மகாலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி கொரடாவுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அதிமுக ஆட்சியின் போது காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை, மீனவர் பிரச்சினை ஆகிய தமிழக உரிமைகளை மீட்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.



கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று வேலுமணி குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியின் போது ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்த கேரளா அரசுடன் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தி கமிட்டி அமைத்ததாகவும், ஆனால் இந்த திமுக அரசு ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி கார்த்திக், ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...