கோயில் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலப்பு குற்றச்சாட்டு: இந்து முன்னணி போராட்டம்

இந்து கோயில்களில் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் 28 ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.



Coimbatore: இந்து கோயில்களில் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் வரும் 28 ஆம் தேதி ஆஞ்சநேயர் கோவில்கள் முன்பு தேங்காய் உடைத்து வேண்டுகோள் வைக்கும் வடிவில் நடைபெறும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தாராபுரம் ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பேசிய அவர், திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படுவது வருத்தத்துக்குரியது என்றார். இது ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்த காலத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



தமிழக கோயில்களிலும் பக்தர்களுக்கு தரமற்ற பிரசாதம் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சுப்பிரமணியம் கூறினார். பழனி உள்பட தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களை தர சோதனை செய்ய வேண்டும் என்பது இந்து முன்னணியின் கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் செந்தில்குமார், கோட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்கள் பாலசுப்பிரமணி, சங்கிலித்துறை நகர நிர்வாகிகள் சண்முகம், கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...