கோவையில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி - 5 பேர் கைது

கோவை காரமடை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் சிறுமியை மீட்டு, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


கோவை: கோவை காரமடை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை கலெக்டர் அலுவலக குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரிக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காரமடை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சிவா நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது. சிறுமியை மீட்ட போலீசார், அங்கிருந்த 5 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்: பல்லடம் இச்சிப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் (23), திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜதுரை (30), ஊட்டியைச் சேர்ந்த மோனிஷா (23), திருவள்ளூர் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த கீதா (24), சென்னையைச் சேர்ந்த பவானி (24) ஆகியோர்.

போலீசார் கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நண்பர்கள் என்பதும், ஊட்டியைச் சேர்ந்த மோனிஷா காரமடையில் சில மாதங்கள் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

மோனிஷாவின் தங்கைக்கும் 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதன் மூலம் மோனிஷாவிற்கு சிறுமி பழக்கமானார். இந்த பழக்கத்தின் மூலம் சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றும் ஆசை வார்த்தை கூறியும் உள்ளார். இதனைத் தொடர்ந்தே சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஐவர் மீதும் போக்சோ சட்டம் மற்றும் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமி கோவை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...