பொள்ளாச்சி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: திருமங்கலம் பெண் தபால் ஊழியர் உயிரிழப்பு வழக்கில் உயர் அதிகாரியை கைது செய்யக் கோரிக்கை

பொள்ளாச்சி தபால் நிலைய ஊழியர்கள், திருமங்கலம் பெண் தபால் ஊழியர் உயிரிழப்பு வழக்கில் உயர் அதிகாரியை பணி நீக்கம் செய்து கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள தலைமை தபால் நிலைய ஊழியர்கள், திருமங்கலம் பகுதி பெண் தபால் ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் உயர் அதிகாரியை பணி நீக்கம் செய்து கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்த சுமதி என்பவருக்கு, அதே அலுவலகத்தில் பணியாற்றிய அஞ்சல் ஆய்வாளர் தீபராஜன் அதிக பணிச்சுமை கொடுத்ததாகவும், அவரது குடும்பத்தைப் பற்றி இழிவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுமதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சலக ஆய்வாளர் தீபராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று கருதும் தபால் ஊழியர்கள், அவரை பணியிடை நீக்கம் செய்யவும், கைது செய்து தக்க தண்டனை வழங்கவும் வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இறந்த பெண் அஞ்சலக ஊழியருக்கு நீதி கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தபால் ஊழியர்களுக்கும் அதிக இலக்கு நிர்ணயித்து அழுத்தம் கொடுப்பதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...