பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணி: கோவை ரயில்கள் 92 நாட்கள் நிற்காது

பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கோவை உட்பட சில ரயில்கள் செப்டம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை 92 நாட்களுக்கு அங்கு நிற்காது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கர்நாடக மாநிலம், பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் சேலம் கோட்டத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் சில ரயில்கள் 92 நாட்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் மும்பை லோக்மானியா திலக் - கோவை ரயில் (எண்: 11013), கோவை - லோக்மானியா திலக் ரயில் (எண்: 11014), பெங்களூரு - எர்ணாகுளம் ரயில் (எண்: 12677), எர்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்: 12678) ஆகிய ரயில்கள் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை 92 நாட்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ரயில்வே துறை பயணிகளுக்கு முன்கூட்டியே இந்த தகவலை தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயண திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...