நவராத்திரி பண்டிகைக்கு கோவையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடிப்பு

கோவையில் நவராத்திரி பண்டிகைக்கு முன்னதாக கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. புதிய வகை பொம்மைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.



Coimbatore: நவராத்திரி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கோவையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அக்டோபர் 3 முதல் 10 நாட்கள் நடைபெறும் இப்பண்டிகையில் கொலு பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கோயில்களிலும் வீடுகளிலும் காட்சிப்படுத்தப்படும் இந்த கொலு பொம்மைகள் பொதுவாக ஏதேனும் ஒரு கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. அஷ்டலட்சுமி, தசாவதாரம் போன்றவை மிகவும் பிரபலமான கொலு பொம்மைகளாக உள்ளன.



இந்த ஆண்டு புதிய வரவாக அயோத்தி ராமர், பூரி ஜெகன்நாதர், பஞ்சுமிட்டாய், தாயக்கட்டை போன்ற கொலு பொம்மைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து ஆர்வத்துடன் கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.

முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு கொலு பொம்மைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பொம்மைகளை வாங்குவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...