பொள்ளாச்சி நகராட்சி: வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் - கமிஷனர் எச்சரிக்கை

பொள்ளாச்சி நகராட்சி வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இக்காலத்திற்குள் வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் கணேசன் எச்சரித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் வரி செலுத்தத் தவறினால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியில் ஆண்டுக்கு 33.77 கோடி ரூபாய் வருவாய் வர வேண்டும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள், கட்டணம், மற்றும் வாடகை உள்ளிட்டவை காலக்கெடுவிற்குள் செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 28 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வரி நிலுவையில் உள்ளது. இது குறித்து நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், "சொத்து வரி முதல் அரையாண்டுக்கு ஏப்ரல் மாதமும், இரண்டாம் அரையாண்டுக்கு அக்டோபர் மாதமும் செலுத்தி, ஐந்து சதவீதம் தள்ளுபடி பெறலாம். முதல் அரையாண்டுக்கு சொத்து வரி செப்டம்பர் மாதத்துக்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கு மார்ச் மாதத்திற்குள்ளும் வரிகளை நிலுவை இன்றி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.

வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த தவறியவர்களின் பெயர்கள் பொது இடங்களில் பெயர் பலகைகளில் வெளியிடப்படும். அதன் பின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யாமலும், குடியிருப்பு வரி செலுத்திக் கொண்டு வணிக நோக்கத்தில் பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

"இவர்கள் தாங்களாகவே முன்வந்து முழுமையான மற்றும் முறையான வரியை விதித்துக்கொள்ள, 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரி செலுத்தக்கூடிய கட்டடத்தை யார் உபயோகப்படுத்துகிறார்களோ, அவர்களிடமிருந்தும் வரி வசூல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது," என்று கமிஷனர் கூறினார்.

காலி மனை வரி நிலுவை வைத்திருந்தால், அந்த விபரங்கள் பத்திரப்பதிவு துறைக்கு தெரிவிக்கப்பட்டு அம்மனைகள் பதிவு மேற்கொள்ள தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக வரியை செலுத்தி முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நகராட்சி கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...